Wednesday, February 06, 2008

Tips

- தமிழினி -

பக்கோடா, முறுக்கு, சீடை மற்றும் முறுக்கிற்கு மாவு பிசையும் போது, முதலில் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பிறகு நீர் ஊற்றி பிசைந்தால், முறுக்கு மொறுமொறுவென்று நல்ல சுவையுடன் இருக்கும். முறுக்கு டப்பாவில் ஒரு சிறுதுணியில் உப்பினைக் கட்டிப் போட்டு வைத்தால், முறுக்கு நீண்ட நாட்களுக்கு நமத்துப் போகாமல் இருக்கும். சீடைகள் செய்யும்போது மாவினை மிகவும் அழுத்தி உருட்டக் கூடாது. அப்படி செய்தால் சீடை வேகும் போது உடைந்துவிடும். இரண்டு விரல்களால் மாவினைக் கிள்ளி, விரல் நுனியாலேயே உருட்டிப் போடவும்.

No comments: